31
நடிகை சரண்யா பொன்வண்ணனின் தந்தை இயக்குனர் அந்தோணி பாஸ்கர் ராஜ் (ஏ.பி.ராஜ்) காலமானார். அவருக்கு வயது 95. முதுமை காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். ஏ.பி.ராஜ் மலையாளத்தில் 60 படங்களுக்கு மேல் இயக்கி உள்ளார். பல தமிழ் படங்களை மலையாளத்தில் ரீமேக் செய்துள்ளார். தமிழில் துள்ளி ஓடும் புள்ளிமான், கை நிறைய காசு படங்களை இயக்கி உள்ளார். சிங்கள மொழியிலும் பல படங்களை இயக்கி உள்ளார்.