நடிகர் ஆர்யா, சாயிஷா காதலித்து வந்தனர். கடந்த ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து ஒரு வருட நிறைவை இருவரும் கொண்டாடினார்கள். இதுகுறித்து சாயிஷா கூறும்போது,’என்னை எல்லாவிதத்திலும் முழுமை அடையச் செய்த எனது கணவர் ஆர்யாவுக்கு முதலாண்டு திருமண வாழ்த்துக்கள். நீ இல்லாமல் என் வாழ்க்கையை கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. அன்பு, பரவசம், நிலைத்தன்மை, தோழமை எல்லாம் ஒரு சேர உன்னிடமிருந்து எனக்கு கிடைக்கிறது. இன்றைக்கும் என்றைக்கும் உன்னை காதலித்துக்கொண்டேயிருப்பேன்’ என குறிப்பிட்டார். சாயிஷாவுக்கு பதில் அளித்துள்ள ஆர்யா,’என் நெடுங்காலம் உன்னுடனே செலவிட வேண்டும். நான் நானாக இருக்க நீதான் காரணம். உன்னை அதிகம் நேசிக்கிறேன். நீ நீயாக இருப்பதற்கு நன்றி. திருமண நாள் நல்வாழ்த்துகள்’ என தெரிவித்திருக்கிறார்.
63