நிவின் பாலி, அதிதி பாலன், மஞ்சுவாரியர் நடிக்கும் படவேட்டு என்ற படத்தை இயக்கி வரும் லிஜூ கிருஷ்ணா மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. படக்குழுவில் பணியாற்றும் பெண் ஒருவரை பட வாய்ப்பு தருவதாக கூறி பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். திருமணம் செய்வதாகக் கூறி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் பின்னர் ஏமாற்றிவிட்டதாகவும் அந்த பெண் புகார் கொடுத்தார். இதையடுத்து இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த கண்ணூர் பகுதிக்கு சென்ற போலீஸார், லிஜு கிருஷ்ணாவை கைது செய்தனர். இந்நிலையில், நடிகைகள் பார்வதி, கீது மோகன்ஸ்தாஸ், ரீமா கல்லிங்கல், ரேவதி உள்பட பலர் பங்கேற்றுள்ள திரைப்பட பெண்கள் லிஜூ கிருஷ்ணாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. இதை தொடர்ந்து, மலையாளத் திரைப்பட இயக்குநர் சங்கம், லிஜு கிருஷ்ணாவை நீக்கியுள்ளது.
பாலியல் புகார் இயக்குனர்: சங்கத்தில் இருந்து நீக்கம்
0 comment
31