ஆண்டுக்கு 50 ஹீரோயின்கள் அறிமுகமானாலும் ஒரு சிலர்தான் தொடர்ந்து நடிக்கிறார்கள். ஒரு சிலருக்குத்தான் முதல் படம் வெளிவருவதற்கு முன்பே அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அமைகிறது. அப்படி ஒரு அதிர்ஷ்டம் தீப்ஷிகாவுக்கு கிடைத்திருக்கிறது. பெயரில் வடக்கத்தி வாசம் அடித்தாலும் அக்மார்க் தமிழ் பொண்ணு. ரேணிகுண்டா, கருப்பன் உள்ளிட்ட படங்களை இயக்கிய பன்னீர்செல்வம் தான் இயக்கும் படத்திற்கான நடிகைகள் தேடலில் வைத்த ஆடிஷனில் கலந்துகொண்ட தீப்ஷிகா, இப்போது அந்தப்படத்தில் நடித்து முடித்தும் விட்டார். இந்தப்படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான மாயா, மாநகரம் உள்ளிட்ட படங்களை தயாரித்த பொட்டன்ஷியல் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் விக்ரம் பிரபுவுடன் இணைந்து நடிக்கிறார் தீப்ஷிகா. தமிழில் நடித்துக்கொண்டு இருக்கும்போதே தெலுங்கில் பிரபல நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட தீப்ஷிகா, அந்தப்படத்திற்கான வெளிநாட்டு படிப்பிடிப்பில் நடித்துவிட்டு, தற்போது ஹைதராபாத்தில் நடக்கும் ஷெட்யூலில் கலந்துகொண்டு நடித்து வருகிறார். இது காதல் கலந்த உணர்வுப்பூர்வமான படமாக உருவாகிறது. இதுதவிர தெலுங்கு ஹீரோ நவீன் சந்திராவுடன் ஒரு படத்தில் நடித்து முடித்தும் விட்டார். கைவசம் இன்னொரு தெலுங்கு படமும் வைத்துள்ளார்.
பெயரில் வடக்கத்தி வாசம் அடித்தாலும் அக்மார்க் தமிழ் பொண்ணு தீப்ஷிகா
0 comment
32