39
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங், நேற்று முன்தினம் மும்பையில் தற்கொலை செய்துகொண்டார். அவர் தீவிர மன அழுத்தத்தில் இருந்ததாகவும் அதனாலேயே தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மரணத்தில் மன நிம்மதியை தேட வேண்டாம் என அமலா பால் அறிவுரை கூறியுள்ளார். சுஷாந்த் சிங் மறைந்து சில மணி நேரத்தில் அவர் இன்ஸ்டாகிராமில் ஒரு மெசேஜ் போட்டிருந்தார். அதில் அமலா பால் கூறும்போது, ‘வாழ்க்கையில் நிம்மதி இல்லை எனக் கூறி மரணத்தை தேடுகிறார்கள். மரணத்தில் நிம்மதியை தேடுபவர்கள், வாழும்போது அந்த அமைதியை தேடலாமே. அதற்கு வாழ்க்கையில் எத்தனையோ வழிகள் இருக்கின்றன. உலகம் ஒவ்வொரு நிமிடமும் நமக்கு ஏதாவது கற்றுக்கொடுக்கிறது. அவை அனைத்துமே வாழ வழிவகை செய்வதாகும். அதை நாம் பின்பற்ற வேண்டும்’ என தெரிவித்துள்ளார். சுஷாந்தின் மரணத்தை மனதில் வைத்தே அமலா பால் இந்த கருத்தை பதிவிட்டுள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.