இயக்குனர் மிஷ்கின் தடாலடியாக எந்த முடிவும் எடுப்பவர் என்று கோலிவுட்டில் அவரைபற்றி ஒரு பார்வை உண்டு. விஷால் நடிக்கும் துப்பறிவாளன் 2ம் பாகம் இயக்கி வந்த நிலையில் திடீரென மிஷ்கினுக்கும், விஷாலுக்கும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து படத்திலிருந்து மிஷ்கின் விலகினார். மோதலுக்கு மிஷ்கின் போட்ட சில கண்டிஷன்தான் காரணம் என்று கூறப்படுகிறது. சம்பளம் 6 சி தர வேண்டும், எந்த ஸ்டார் ஓட்டலிலும் தங்குவேன் ஏன் என்று கேட்கக்கூடாது, விஷால் தரப்பிலிருந்து எந்த விதமான பேச்சும், தகவல் பரிமாற்றமும் போன், வாட்ஸ் அப்பில் இருக்கக்கூடாது, மெயில் மூலம் மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும். என் அனுமதி இல்லாமல் படத்தின் டைட்டில் சார்ந்து எந்த முடிவும் விஷால் எடுக்கக்கூடாது என சரமாரியாக மிஷ்கினின் கண்டிஷன் மோதலுக்கு வழி வகுத்ததாக தெரிகிறது.
33