29
நடிக்க வந்ததில் இருந்தே தமிழ் சினிமாவில் அதிக ஈடுபாடு காட்டாமல் இருந்தார் ஸ்ரேயா. காரணம், அவர் வந்த காலத்தில் அதிகமான ஹீரோயின்கள் இல்லாததால், அவரது பட வாய்ப்பை பறிப்பதற்கான போட்டி நடிகைகள் உருவாகவில்லை. இப்ேபாது நிலமை தலைகீழாகி விட்டது. போன் அழைப்பை எடுக்கவில்லை என்றால், அடுத்த நிமிடம் அந்த வாய்ப்பு இன்னொரு நடிகைக்கு சென்றுவிடுகிறது. காதல் கணவருடன் வெளிநாட்டில் குடியேறிய ஸ்ரேயா, தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த்சாமி, ஆத்மிகாவுடன் இணைந்து நரகாசூரன் என்ற படத்தில் நடித்துள்ளார்.
இப்படம் பைனான்ஸ் பிரச்னை காரணமாக ரிலீசாகவில்லை. அடுத்து ஆர்.மாதேஷ் இயக்கும் சண்டக்காரி என்ற படத்தில் விமல் ஜோடியாக நடிக்கிறார். இந்நிலையில், மீண்டும் தமிழில் நடிக்க விரும்பும் ஸ்ரேயா, கனமான கேரக்டர் இருந்தால் சொல்லுங்கள், நடிக்கிறேன் என்று மெசேஜ் அனுப்பி வாய்ப்பு கேட்கிறார். இதற்காக கிளாமர் போட்டோசெஷன் நடத்தியுள்ளார். அந்த போட்டோக்களை முன்னணி இயக்குனர்கள்
மற்றும் ஹீரோக்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்