சென்னை: 10மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடம் பெரும் மாணவர்களை நேரில் சந்திக்கப்போவதாக நடிகர் விஜய் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொகுதி வாரியாக முதல் மூன்று இடம் பெறும் மாணவர்களை நேரில் சந்தித்து பரிசளிக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் முதல் மூன்று மதிப்பெண் பெறும் 10, 12ம் வகுப்பு மாணவர்களை சந்திகிறார் விஜய் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
234 தொகுதிகளிலும், அதிக அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களை சென்னை அழைத்து விஜய் பரிசு வழங்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, சந்திப்பு தேதி குறித்து அறிவியப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. +2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நேரில் அழைத்து பாராட்டி, கல்வி உதவித்தொகை வழங்க நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளார். மாவட்டம் தோறும் மாணவர்களின் விவரங்களை அனுப்ப விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உத்தரவிட்டுள்ளார்.