மும்பை: செக் மோசடி வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாத நடிகை ராக்கி சாவந்தின் சகோதரரை போலீசார் கைது செய்தனர். பாலிவுட் நடிகை ராக்கி சாவந்தின் சகோதரர் ராகேஷ் சாவந்த் மீது தொழிலதிபர் ஒருவர் செக் மோசடி வழக்கை மகாராஷ்டிரா மாநிலம் அந்தேரி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து அவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். பின்னர் புகார்தாரரின் பணத்தைத் திருப்பித் தருவதாக உறுதியளித்ததால், நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
ஆனால் முறையாக நீதிமன்றத்தில் ஆஜராகாததால், அந்தேரி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை பிறப்பித்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் ராகேஷ் சாவந்த்தை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை வரும் 22ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க அந்தேரி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது.