மும்பை: மோசடி வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். அவர் ரூ.200 கோடி மோசடியில் ஈடுபட்டதாகவும் பெற்ற பணத்தில் இருந்து ரூ.10 கோடி அளவிற்கான பரிசுபொருட்களை நடிகை ஜாக்குலினுக்கு வாங்கிக்கொடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கிற்கான விசாரணை வளையத்திற்குள் நடிகை ஜாக்குலினும் தற்போது சேர்க்கப்பட்டு இருக்கிறார். இதுகுறித்து பேசிய நடிகை ஜாக்குலின், சுகேஷ் என்னுடைய உணர்வுடன் விளையாடி ஏமாற்றிவிட்டார் என்றும் அவர் மோசடி பேர்வழி என்று எனக்கு தெரியாது என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் தற்போது பாலிவுட் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்டு வரும் நடிகை ஜாக்குலின் வெயில் காலங்களில் விலங்குகள் மற்றும் பறவைகள் நீருக்காக படும் கஷ்டத்தை தீர்க்க ஒவ்வொரு வீட்டிற்கு முன்பும் மண் கலயங்களில் நீரை நிரப்பி வையுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையடுத்து மும்பையிலுள்ள தனது வீட்டிற்கு வெளியே மண் கிண்ணத்தில் நீரை நிரப்பி அவர் வைத்திருக்கிறார். இதேபோல் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று சாலையோரங்களில் நீரை வைத்து வந்திருக்கிறார் ஜாக்குலின். இந்த பணியை தனது உதவியாளர்களை வைத்து தினமும் தொடரப்போவதாகவும் தெரிவித்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் ஜாக்குலினை பாராட்டி வருகிறார்கள்.