‘அதே கண்கள்’, ‘பெட்ரோமாக்ஸ்’ ஆகிய படங்களை தொடர்ந்து ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா நடித்துள்ள ‘தீராக்காதல்’ படம் நாளை திரைக்கு வருகிறது. ரவிவர்மன் நீலமேகம் ஒளிப்பதிவு செய்ய, சித்து குமார் இசை அமைத்துள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. படம் குறித்து ெஜய் கூறுகையில், ‘கதை கேட்டபோது நன்றாக இருந்தது. ஆனால், எனக்கு இது செட்டாகுமா என்று தயங்கினேன். அப்போது ஐஸ்வர்யா ராஜேஷ், இக்கதையில் நான் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று, எனக்காக இயக்குனரிடம் சிபாரிசு செய்தார்.
நான் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்புக்கு ரசிகன். அவர் சொன்னதால் இயக்குனர் என்மீது நம்பிக்கை வைத்து நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அவர் இயக்கிய ‘அதே கண்கள்’ படத்தை 4 முறை பார்த்தேன். இதுபோன்ற இயக்குனரிடம் பணியாற்ற ஆசைப்பட்டேன். அது இப்போது நடந்துள்ளது. ரவிவர்மன் நீலமேகம் என்னை ரொம்ப அழகாக காட்டியுள்ளார். பாடல்களும், இசையும் அருமையாக இருக்கிறது. நான் சித்து குமாரின் தீவிர ரசிகன். இப்படம் அனைவருக்கும் தங்கள் சொந்த வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களைப் போல் இருக்கும். ரோகின் வெங்கடேசன் பணியும், பாணியும் தனித்துவமாக இருக்கும். படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷும், ஷிவதாவும் போட்டி போட்டு நடித்துள்ளனர்’ என்றார்.