ஓடிடி தளம் ஒன்றின் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஐஸ்வர்யா ராஜேஷ் கூறுகையில், ‘நான் தனி ஹீரோயினாக நடித்து வெற்றிபெறுவதால், முன்னணி ஹீரோக்கள் தங்களது படங்களில் எனக்கு வாய்ப்பு தராமல் புறக்கணிக்கின்றனர்’ என்றார். மேலும் அவர் கூறுகையில், ‘நான் திரைத்துறையுடன் தொடர்பில்லாத பின்னணியில் இருந்து வருகிறேன். எனது தந்தை தெலுங்கு படவுலகில் இருந்தார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக நான் எட்டு வயதில் அவரை இழந்தேன். நடிகையாக மாறுவதற்கான எனது பயணம் சவாலானது.
எனது தோற்றத்தின் அடிப்படையில், குறிப்பாக, என் கருமையான நிறத்தின் அடிப்படையில் நான் சினிமாவுக்கு தகுதியற்றவள் என்று விமர்சித்தனர். பெண்களை மையப்படுத்திய படங்களில் பணிபுரிய வேண்டும் என்ற தீவிர ஆசை எனக்கு இருந்தது. ‘கனா’ படத்தில் இருந்து அந்த ஆசை நிறைவேற தொடங்கியது. பிறகு நான் சோலோ ஹீரோயினாக 15 படங்களில் நடித்தேன். என் நடிப்பைப் பாராட்டிய தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், துல்கர் சல்மான் போன்றவர்களை தவிர, என் நடிப்பைப் பாராட்டிய மற்ற நடிகர்கள் எனக்குப் பொருத்தமான கேரக்டரை வழங்கவில்லை’ என்று, இவ்வளவு நாட்களாக தன் மனதிற்குள் மறைத்து வைத்திருந்த ரகசியத்தை உடைத்தார்.