மும்பை: தனது மனைவி கவுரி கானுடன் இணைந்து ஷாருக்கான் துபாயில் 18,000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட் முன்னணி நடிகர் ஷாருக்கானும், அவரது மனைவி கவுரி கானும் இணைந்து திரைத்துறையில் மட்டுமின்றி, துபாயில் பெரும் முதலீடுகளை செய்து பிசினஸ் செய்து வருகின்றனர். ரியல் எஸ்டேட், ஆடம்பர பங்களா, ஓட்டல்கள் உள்பட பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து அதிக வருவாய் ஈட்டுகின்றனர். கடந்த 2008ல் துபாயில் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன் இணைந்து, கடற்கரைக்கு முன்னால் ஆடம்பர பங்களா ஒன்றை கட்டினர். 2012ல் சிக்னேச்சர் பீச் பிரண்ட் குடியிருப்பு திட்டத்தை தொடங்கினர். அப்பகுதிக்கு எஸ்ஆர்கே பவுல்வேர்ல்ட் என்று பெயரிடப்பட்டது.
மேலும், ராஸ் அல் கைமாவில் இருக்கும் டானா தீவுகளில் ஆடம்பர பங்களாக்களை அமைத்துள்ளனர். லாஸ் ஏஞ்சல்ஸ் கட்டிடக்கலைஞர் டோனி ஆஷாவுடன் இணைந்து ஷாருக்கானும், கவுரி கானும் ஆடம்பர பங்களாக்களை கட்டமைத்துள்ளனர். கடற்கரையை ஒட்டியுள்ள இந்த பங்களாக்களில் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கான எல்லா அம்சங்களும் இருக்கின்றன. துபாயில் மட்டும் ஷாருக்கானின் பல்வேறு திட்டங்களின் மொத்த மதிப்பு 2.17 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (18,000 கோடி ரூபாய்) மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.