சென்னை: மேடையில் ஆண்ட்டி ஒருவர் தன்னிடம் ஆபாசமாக நடந்துகொண்டதாக துல்கர் சல்மான் தெரிவித்தார். இப்போது ‘கிங் ஆப் கோதா’ படத்தின் ரிலீஸுக்காக புரோமோஷன் பணிகளில் துல்கர் சல்மான் பிசியாக இருக்கிறார். துல்கர் சல்மானின் சமீபத்திய பேட்டியில் அவரது மோசமான ரசிகர் சந்திப்பு பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், ‘ஒரு வயதான பெண், எதற்காக என தெரியவில்லை, அவ்வளவு மோசமாக நடந்துகொண்டார். என் பின்னால், அந்த இடத்தில் கைவைத்து அழுத்தினார்.
எனக்கு வலி ஏற்பட்டது. மேடையில் பலரும் அங்கு இருந்தார்கள். ‘ஆண்ட்டி தயவு செஞ்சு அங்க போய் நில்லுங்க’ என சொல்ல நினைத்தேன். அந்த அளவுக்கு மோசமாக நடந்துகொண்டார். பலரும் கையை எங்கே வைப்பது என தெரியாமல் பின்னால் வைக்கிறார்கள். ஆனால் அந்த ஆண்ட்டி இதை வேண்டுமென்றே செய்ததாக தெரிந்தது. இந்த சம்பவம் நடந்தபோது போட்டோவுக்கு ஸ்மைல் செய்ய கூட முடியாமல் நின்றேன்’ என துல்கர் சல்மான் கூறி இருக்கிறார்.