சென்னை: விஷால் இரட்டை வேடத்தில் நடித்துள்ள படம், ‘மார்க் ஆண்டனி’. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்தப் படத்தில் ரிது வர்மா ஹீரோயின். எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கிறார். செல்வராகவன், ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளனர். ‘பொன்னியின் செல்வன்’ படத்தில், கதையை அறிமுகப்படுத்த கமல்ஹாசன் குரலை பயன்படுத்தி இருந்தனர். சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படத்தில் அசரீரி குரலுக்கு விஜய் சேதுபதி பேசியிருந்தார்.
இதற்காக அவர் சம்பளம் எதுவும் வாங்கவில்லை. ஆனாலும் படம் முழுக்க பல இடங்களில் அவர் டப்பிங் பேசியிருந்தார். அந்த பாணியில் இப்போது மார்க் ஆண்டனி படத்துக்கு கார்த்தி பேசியிருக்கிறார். படத்தின் ஆரம்ப காட்சிகளில் கதையை நகர்த்தி செல்லும் குரலாக கார்த்தியின் பின்னணி குரல் இடம்பெறும் என கூறப்படுகிறது. இனி ஒரு ஹீரோவின் படத்துக்கு இன்னொரு ஹீரோ பேசுவது டிரெண்டாக மாறும் என கூறப்படுகிறது.