துபாய்: தனது வீட்டில் நடைபெற்ற கிருஷ்ண கீர்த்தனையில் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்துகொண்டார். சினிமாவில் ஒருபுறம் பிசியாக இருந்தாலும் வெளிநாடுகளில் இசைக்கச்சேரி நடத்துவதிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான். தற்போது இசை நிகழ்ச்சி ஒன்றிற்காக துபாய் சென்றிருந்த ஏ.ஆர்.ரஹ்மான், அங்குள்ள தனது பங்களாவில் கிருஷ்ண கீர்த்தனை நடத்த இசைக் கலைஞர்களுக்கு அனுமதி கொடுத்து, அதில் பங்கேற்றும் இருக்கிறார். துபாயில் ரஹ்மானுக்கு சொந்தமான பங்களா இருக்கிறது. அங்கு நடந்த இந்த கீர்த்தனையின்போது அங்குள்ள இசைக்கலைஞர்களுடன் சேர்ந்து அமர்ந்தபடி ரஹ்மான் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். அதோடு அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, இந்த கீர்த்தனை சர்ப்ரைஸாக இருந்ததாகவும், அதை அன்போடு நடத்தியவர்களுக்கு தன் நன்றியை தெரிவித்துள்ளார். ரஹ்மானின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள், நெட்டிசன்கள், மதங்களை கடந்து இசையால் அனைவனையும் ரஹ்மான் இணைத்திருக்கிறார். அவர் எப்போதுமே அனைத்து மதங்களையும் மதிப்பவர். உண்மையான இந்தியர் என பாராட்டி வருகிறார்கள்.