சென்னை: நடிகை கஸ்தூரியின் டிவிட்டர் பதிவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பதிலடி கொடுத்திருக்கிறார். சில தினங்களுக்கு முன் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது மனைவி சாய்ரா பானுவுடன் கலந்து கொண்டார். அப்போது அவரது மனைவி கூட்டத்தினரின் முன் பேச தயாரானபோது ‘இந்தியில் பேசாதீங்க தமிழில் பேசுங்கள் ப்ளீஸ்’ என்று ஏ.ஆர்.ரஹ்மான் அன்பு கட்டளை விடுத்தார். இதன்பின் பேசிய அவரது மனைவி, தமிழில் சரளமாக பேச எனக்கு வராது. அதனால், தயவு செய்து மன்னித்து விடுங்கள் என்று கூறிவிட்டு ஆங்கிலத்தில் பேசினார்.
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இந்நிலையில், நடிகை கஸ்தூரி, ‘என்னது ரஹ்மான் மனைவிக்கு தமிழ் வராதா? அவங்க தாய் மொழி என்ன? வீட்டில் என்ன பேசுவாங்க?’ என்று டிவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான், கஸ்தூரியின் டிவிட்டை டேக் செய்தி ‘காதலுக்கு மரியாதை’ என்று மட்டும் பதிலடி கொடுத்திருக்கிறார். அதாவது, எனது மனைவி எந்த மொழி பேசினாலும் நான் அவரை காதலிக்கிறேன். அவருக்கு மரியாதை தருகிறேன் என அவர் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார். ‘ரஹ்மானின் மனைவி சாயிரா, கேரளாவை சேர்ந்தவர். இது கூடவா உங்களுக்கு தெரியாது’ என கஸ்தூரியை நெட்டிசன்கள் தாக்கி கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.