ஐதராபாத்: ‘ஜவான்’ படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கிறார் இயக்குனர் அட்லி. அவரைப் பற்றி இப்போது புது தகவல் ஒன்று வலம் வருகிறது. அதாவது, பாலிவுட் பக்கம் சென்று படம் இயக்கிய அட்லி இப்போது டோலிவுட் பக்கம் செல்ல இருக்கிறாராம்.
‘புஷ்பா’ படத்திற்காக சிறந்த நாயகனுக்காக தேசிய விருது வாங்கப்போகும் நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து தான் அடுத்து படம் இயக்கப்போகிறாராம் அட்லி. ஆனால் இதுகுறித்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. அல்லு அர்ஜுன் தற்போது ‘புஷ்பா 2’ படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து திரி விக்ரம் இயக்கத்தில் நடிக்க அவர் கதை கேட்டுள்ளார். அல்லு அர்ஜுனிடம் கதை சொல்ல அட்லியும் நேரம் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது.