ஐதராபாத்: தெலுங்கில் ‘ஜகதேக வீருடு அதிலோக சுந்தரி’ போன்ற மற்றொரு ஃபேன்டஸி என்டர்டெய்னரில் சிரஞ்சீவியைப் பார்க்க ஆர்வமாக இருக்கும் ரசிகர்கள், அவரது புது பட அறிவிப்பால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு, மெகாஸ்டார் சிரஞ்சீவி ஒரு ஃபேண்டஸி திரைப்படத்தில் நடிக்கவுள்ளார், பிம்பிசாரா படத்தின் இயக்குநர் வசிஷ்டா இந்த புதிய திரைப்படத்தை இயக்குகிறார்.
UV கிரியேஷன்ஸின் கீழ் வி வம்சி கிருஷ்ணா ரெட்டி, பிரமோத் உப்பளபதி மற்றும் விக்ரம் ரெட்டி ஆகியோர் மிகப்பெரும் பட்ஜெட்டில் தயாரிக்கும் சிரஞ்சீவியின் 157வது படம் இது.
சிரஞ்சீவியின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று இந்த பட அறிவிப்பு வெளியிடப்பட்டது. சிரஞ்சீவி நடிப்பில் சமீபத்தில் போலா சங்கர் படம் வெளியானது. இந்நிலையில் மலையாளத்தில் ஹிட்டான ப்ரோ டாடி படத்தின் ரீமேக்கில் அவர் நடிக்க இருந்தார். அந்த திட்டத்தை இப்போது ஒத்திவைத்துவிட்டு, இப்படத்தில் முதலில் நடிக்க சிரஞ்சீவி முடிவு செய்துள்ளார்.