சென்னை: சோஷியல் மீடியாவால் தான் பாதிக்கப்பட்டதாக நடிகை ஷெரின் கூறினார்.மீண்டும் நடிக்க வந்திருக்கும் ஷெரின் கூறியதாவது: நடுவில் என்னை ஒருவர் மீடியாவில் இழிவாகப் பேசினார். இதனால் எனக்கு சில வெறுப்பாளர்கள் சோஷியல் மீடியாவில் உருவானார்கள். அவர்களை நான் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டாலும், அவர்கள் என் பின்னால் இருந்தார்கள். எனது பெற்றோர் முதல் நாய் வரை வம்புக்கு இழுத்தார்கள். எனது பிரச்னையை என்னால் கடந்து செல்ல முடியும். என்னால் எனது குடும்பத்தினருக்கு ஒரு பிரச்னை வரும்போது, அதை எப்படி என்னால் கடந்து போக முடியும்? மிகவும் உடைந்து போய் அழுதேன். அப்போது என் அம்மாவை பிடித்துக்கொண்டு அழுதுள்ளேன்.
என்னை திட்டலாம். ஆனால், என் அம்மாவை எதற்கு திட்ட வேண்டும்? அதிலென்ன நியாயம் இருக்கிறது? யாரோ ஒருவர் எங்கேயோ அமர்ந்துகொண்டு, இன்னொருவரை பற்றி தவறாக எழுதுகிறார்கள் என்றால், அவர்கள் வாழ்க்கையில் எவ்வளவு தவறானவர்களாக இருப்பார்கள்? சோஷியல் மீடியாவால் பல பெண்களுக்கு சுதந்திரம் கிடைத்திருக்ககிறது. அதே வேளையில், அவர்கள் எந்தவொரு விஷயத்தையும் பொறுத்துக்கொள்ள வேண்டியஅவசியம் இல்லை. சோஷியல் மீடியாவில் ஃபாலோயர்ஸை அதிகரித்து விரும்புவதை பேசலாம். கேட்க ஆட்கள் இருக்கின்றனர். நிறைய பிளஸ் சோஷியல் மீடியாவில் இருந்தாலும், மிரட்டல் வரும், அச்சுறுத்தல் வரும். அதுதான் சோஷியல் மீடியாவின் தீமைகள் என்று சொல்லலாம்.