தமிழ் இயக்குனர் மதுமிதா இயக்கிய ‘மூணே மூணு வார்த்தை’ படத்தின் மூலம் அறிமுகமானவர் தர்ஷனா ராஜேந்திரன், அதன் பிறகு கவண், இரும்புத்திரை, தீவிரம் படங்களில் நடித்தார். மலையாளத்தில் இவர் நடித்த இருள், ஜெய ஜெய ஜெய ஜெயஹே, புருஷ பிரேதம் படங்கள் இவருக்கு பெரிய அங்கீகாரத்தை கொடுத்துள்ளது. இப்போது தெலுங்கில் அறிமுகமாகிறார். பிரவீன் கண்ட்ரேகுலா இயக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் இன்னொரு நாயகியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார்.
இது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதை. தர்ஷனா ராஜேந்திரன் நடிகை என்பதுடன் நல்ல பாடகியாகவும் இருக்கிறார். மாயநதி, சர்காஸ் சிர்கா 2020, ஹிருதயம், ஜெய ஜெய ஜெய ஜெயஹே படங்களில் பாடியுள்ளார். இதுதவிர ‘கண்ட்ரோல் ஆல்ட் டெலிட்’ மற்றும் ‘அன்புஷ்டு நயா சபர்’ என்ற வெப் தொடரிலும் நடித்துள்ளார். விரைவில் தமிழ் படம் ஒன்றிலும் நடிக்க இருக்கிறார். இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.