எஸ்.ஆர் பிலிம் பேக்டரி சார்பில் சிவராஜ் தயாரித்துள்ள படம், ‘கலைஞர் நகர்’. இளையராஜா ஒளிப்பதிவு செய்ய, நரேஷ் இசை அமைத்துள்ளார். பாபா கென்னடி வசனம் எழுத, சுகன் குமார் இயக்கியுள்ளார். பிரஜின் ஹீரோவாகவும், ‘மிக மிக அவசரம்’ ஸ்ரீபிரியங்கா ஹீரோயினாகவும் நடித்துள்ள இதில், இன்னொரு ஹீரோயினாக டாலி ஐஸ்வர்யா நடித்துள்ளார். அவர் கூறுகையில், ‘மாடலிங்கில் ஈடுபட்ட நான், பிறகு ‘காதலே கோமாளி’ என்ற குறும்படத்தில் நடித்தேன். 23 மணி நேரத்தில் உருவாக்கப்பட்டுள்ள சாதனை படமான ‘கலைஞர் நகர்’ படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். ஒரே நாளில் 19 லொக்கேஷன்களில் படப்பிடிப்பு நடந்தது.
மேடை நடனக்கலைஞர்களின் வாழ்வாதாரம் மற்றும் சமூகத்தில் அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை குறித்து சொல்லும் கதை கொண்ட இதில் பிரஜின், ஸ்ரீபிரியங்கா ஆகியோருடன் நடித்தது மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. தற்போது ‘இரவின் கண்கள்’, ‘ஹேப்பி பர்த்டே ஜூலி’, ‘கடைசி தோட்டா’ ஆகிய படங்களில் நடிக்கிறேன். தமிழில் நிறைய ஐஸ்வர்யாக்கள் இருப்பதால், என் பெயரை ‘டாலி ஐஸ்வர்யா’ என்று மாற்றிக்கொண்டேன்’ என்றார்.