ஐதராபாத்: பிப்ரவரி 17ம் தேதி தனுஷ், சம்யுக்தா நடிப்பில் தமிழில் திரைக்கு வந்த ‘வாத்தி’, தெலுங்கில் தியேட்டர்களில் வெளியான ‘சார்’ ஆகிய படங்களை இயக்கியவர், வெங்கி அட்லூரி. ₹30 கோடியில் உருவான இந்தப் படம், ₹100 கோடி வரை வசூல் செய்திருந்ததாக படக்குழுவினர் கூறினர். கல்வியின் முக்கியத்துவம் குறித்து இப்படம் பேசியிருந்தது.
இந்நிலையில், வெங்கி அட்லூரி இயக்கும் புதிய படத்தில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடிப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. சித்தாரா எண்டர்டெயின்மெண்ட், ஃபார்ச்சூன் 24 ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் ஷூட்டிங், வரும் அக்டோபர் மாதம் தொடங்குகிறது. ஒரேகட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடித்து, அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் படத்தை திரைக்குக் கொண்டு வர இயக்குனர் திட்டமிட்டுள்ளார்.