அமெரிக்காவைச் சேர்ந்த இசபெல்லா பாரெட் (17) என்பவர் மாதந்தோறும் எட்டு லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கிறார். பேஷன் மற்றும் நடிப்பு துறையில் பணியாற்றி வரும் அவர், தனது வீட்டு வேலைகளை தானே செய்து கொள்கிறார். ‘க்ளிட்ஸி கேர்ள்’ என்ற பெயரில் நகைகளை அறிமுகப்படுத்தியுள்ளார். பெரிய பிராண்டுகளுக்கு மாடலிங் செய்கிறார். தினமும் மேக்கப்பிற்காக ரூ.28,000 செலவிடுகிறார்; ஆனால் வீட்டில் இருக்கும் போது சாதாரண பெண்ணாக நடந்து கொள்கிறார். பாத்திரம் கழுவுவது, துணிகளை துவைப்பது போன்ற அனைத்து வீட்டு வேலைகளையும் அவரே செய்கிறார்.
இதுகுறித்து இசபெல்லா கூறியதாவது, ‘என்னை எனது பெற்றோர் எப்போதும் பாராட்டிக் கொண்டே இருப்பார்கள். எனது இலக்குகளில் நான் கவனம் செலுத்துவதால் எனக்கு எல்லாம் சாத்தியமாகிறது. ஒவ்வொரு நாளும் ஏதாவது செய்தால், அதற்கு ஈடாக உங்களுக்கு ஏதாவது கிடைக்கும், அதனால் ஒருபோதும் நீங்கள் சோர்வடைய மாட்டீர்கள்’ என்று மற்றவர்களுக்கு அவர் அறிவுரை கூறுகிறார். இவரது வீடியோவை பார்த்து பலரும் அவரது அறிவுரையை பாராட்டி வருகின்றனர்.