பாலிவுட் மற்றும் தென்னிந்திய மொழிகளில் நடிக்கும் ராசி கன்னா, தற்போது சுந்தர்.சி இயக்கி நடிக்கும் ‘அரண்மனை’ 4ம் பாகத்தில் நடிக்கிறார். அவர் கூறுகையில், ‘நான் எந்தப் பின்னணியும் இல்லாமல் திரைத்துறைக்கு வந்தேன். பல படங்களில் நடித்து வெற்றிகரமான ஹீரோயினாக மாறி, ரசிகர்களிடம் எனக்கான நற்பெயரை தக்கவைத்துக் கொண்டேன். அவர்களிடம் இருந்து அன்பை மட்டுமே எதிர்பார்க்கிறேன். நம் திறமையை நாமே குறைத்து மதிப்பிடக்கூடாது.
நிரந்தரம் இல்லாத சினிமா வாழ்க்கையில், ஹீரோயின்களுக்கான எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கற்பனை கூட செய்ய முடியவில்லை. இதைவிட அதிக புதுப்பட வாய்ப்புகள் கிடைக்கலாம். அல்லது கிடைக்காமலும் போகலாம். இரண்டுக்கும் தயாராக இருக்க வேண்டும்’ என்றார். அவர் ஏன் இவ்வளவு விரக்தியடைந்து பேசுகிறார் என்று, நெட்டிசன்கள் கமென்ட் மூலம் கேள்வி கேட்டுள்ளனர்.