ஐதராபாத்: பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கேரக்டரில் நடித்தவர் சோபிதா துலிபாலா. தமிழ் மட்டுமின்றி, இந்தி, தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கிறார். சோபிதாவும் நாக சைதன்யாவும் லிவிங் டு கெதர் முறையில் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் இதுபற்றி வெளிப்படையாக அவர்கள் இதுவரை பேசவில்லை. இந்நிலையில் நாக சைதன்யாவுடன் உள்ள உறவை பற்றி சோபிதா துலிபாலா கூறியதாவது: எதுவும் தெரியாமல் பேசுபவர்களுக்கு நான் பதில் அளிக்க வேண்டியது இல்லை என நினைக்கிறேன். நான் எதுவும் தவறு செய்யாத நிலையில் விளக்கம் அளிக்க வேண்டியது இல்லை. விஷயம் என்னவென்று தெரியாமல் அவர்கள் இஷ்டத்திற்கு எழுதுகிறார்கள்.
நம் வாழ்க்கையில் கவனம் செலுத்தி அதை மேம்படுத்த வேண்டும். நல்லவராக இருக்க முயற்சி செய்ய வேண்டும் என்றார். நாக சைதன்யாவும், சோபிதாவும் கடந்த 6 மாதங்களாக காதலிப்பதாக தகவல்கள் பரவின. ஃபார்முலா ஒன் பந்தயம் என்றால் நாக சைதன்யாவுக்கும், சோபிதாவுக்கும் மிகவும் பிடிக்கும். அதன் மூலம் தான் அவர்களுக்கு இடையே நெருக்கம் ஏற்பட்டது. இப்போது அவர்கள் உறவை பற்றி எதையும் அறிவிக்க விரும்பவில்லை. ஒருவரையொருவர் தெரிந்து கொள்வதில் சந்தோஷமாக இருக்கிறார்கள் என அவர்களுக்கு நெருக்கமான ஒருவர் கூறினார்.