சமந்தா கடந்த ஒரு வருடமாக மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது அதற்காக தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். நோய் பாதிப்புடனேயே ‘யசோதா’, ‘சாகுந்தலம்’ ஆகிய படங்களில் நடித்தார். அப்படங்களும் திரைக்கு வந்தது. இதையடுத்து ஏற்கனவே அவர் ஒப்பந்தமான ‘சிட்டாடல்’ என்ற வெப்சீரிஸ் மற்றும் ‘குஷி’ என்ற பான் இந்தியா படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்நிலையில், சினிமாவில் இருந்து சிறிது ஓய்வெடுக்க இருப்பதாக அறிவித்தார். தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செல்ஃபி ஒன்றைப் பகிர்ந்து, ‘கடினமான எனது 6 மாத காலம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இதை நான் சாத்தியப்படுத்தி இருக்கிறேன் என்பது நிறைவாக இருக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார். அது எதுபோன்ற கடுமை என்று அவர் குறிப்பிடவில்லை. அவர் ஏற்கனவே அறிவித்தபடி, சினிமாவில் இருந்து ஓய்வெடுப்பாரா என்பது பற்றி பேசவில்லை.