சென்னை: இந்திய இசைஅமைப்பாளர்களில் அதிக சம்பளம் வாங்குகின்ற நபராக அனிருத் மாறி இருக்கிறார். அனிருத் ஒரு படத்துக்கு ரூ.4 கோடி வரை சம்பளம் வாங்கிக்கொண்டுஇருந்தார். ஏ.ஆர்.ரஹ்மானின் சம்பளம் ரூ.7 கோடி. இந்திய இசை அமைப்பாளர்களில் அதிகமாக சம்பாதிக்கும் இசை அமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் இருந்து வந்தார். இந்த நிலையில், ‘விக்ரம்’ படத்தின் வெற்றிக்கு பிறகு அனிருத்தின் சம்பளம் ரூ.6 கோடியாக மாறியது. தற்போது ‘இந்தியன் 2’ படத்துக்கு இசை அமைக்க, அனிருத்துக்கு ரூ.7 கோடி சம்பளம் தரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்தியில் ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கான் நடித்துள்ளார். இந்தப் படத்தின் மூலம் அனிருத் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். இந்தப் படத்துக்கு பாடல்கள் மற்றும் பின்னணி இசை அமைக்க, அனிருத்துக்கு ரூ.10 கோடி வரை சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கடந்த 20 ஆண்டுகளாக நம்பர் 1 இடத்தில் இருந்த ஏ.ஆர்.ரஹ்மான், தற்போது 2வது இடத்துக்கு வந்துள்ளார். இந்திய இசை அமைப்பாளர் களிலேயே அதிகமான சம்பளம் வாங்குபவ ராக அனிருத் மாறிஇருக்கிறார்.