மும்பை: தென்னிந்திய மொழிப் படங்களை தொடர்ந்து இந்தியிலும் நடித்து வருகிறார், ஜோதிகா. கடந்த 1998ல் ‘டோலி சஜா கே ரக்னா’ என்ற இந்திப் படத்தில் நடித்திருந்த அவர், 26 ஆண்டுகளுக்குப் பிறகு ‘சைத்தான்’ என்ற படத்தில் நடித்திருந்தார். விகாஸ் பால் இயக்கத்தில் அஜய் தேவ்கன், மாதவன், ஜோதிகா நடிப்பில் திரைக்கு வந்த இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.
இதையடுத்து பார்வையற்ற மாற்றுத்திறனாளி தொழிலதிபரான ஸ்ரீகாந்த் பொல்லா என்பவரின் வாழ்க்கை வரலாறு படத்தில் ஜோதிகா நடிக்கிறார். தொழிலதிபர் கேரக்டரில் ராஜ்குமார் ராவ் நடிக்கிறார். இப்படத்துக்கு முதலில் ‘ஸ்ரீ’ என்று பெயரிடப்பட்டது. ஆனால், திடீரென்று ‘ஸ்ரீகாந்த்’ என்று பெயர் மாற்றப்பட்டதாக படக்குழுவினர் தெரிவித்தனர். வரும் மே மாதம் 10ம் தேதி பல்வேறு மொழிகளில் திரைக்கு வரும் இப்படத்தை துஷார் இயக்கியுள்ளார்.