மும்பை தொழிலதிபரும், தனது நீண்ட நாள் நண்பருமான கவுதம் கிட்ச்லுவை காதல் திருமணம் செய்துகொண்டு, பிறகு நீல் என்ற மகனுக்கு தாயான காஜல் அகர்வால், மும்பையில் தனிக்குடித்தனம் இருக்கிறார். தொடர்ந்து சினிமாவில் நடிக்கிறார். இந்நிலையில், அவர் தனது குடும்பத்துடன் நேரம் செலவிட முடியாததால், சினிமாவை விட்டு விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதையறிந்து டென்ஷனான காஜல் அகர்வால், ‘சினிமாவில் இருந்து எந்த நிலையிலும் நான் விலக மாட்டேன்.
அதற்கான நெருக்கடியும் எனக்கு இல்லை. ரசிகர்கள் என்மீது அதிக அன்பு செலுத்துகின்றனர். அதை அவ்வளவு எளிதில் விட்டுக்கொடுக்க மாட்டேன். எனது திரைத்தொழிலும், குடும்ப வாழ்க்கையும் தனித்தனியாகவே இருக்கிறது. அதற்கு இப்போது மட்டுமல்ல, எப்போதும் பிரச்னை வராது. எனவே, எனது திரைப்பயணம் தடையின்றி தொடரும்’ என்றார்.