தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் உருவாகி வரும் “மாவீரன்” திரைப்படம் வரும் 14ஆம் தேதி வெளியாக உள்ளது. சினிமா மட்டுமின்றி, சிரமத்தில் உள்ள பலருக்கும் தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார். அந்த வகையில் இவர் செய்த உதவிகளின் பட்டியலில் மற்றொரு செயலும் இடம் பெற்றுள்ளது.
வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவில், ஷேரு என்ற 3 வயது ஆண் சிங்கத்தை சிவகார்த்திகேயன் தத்தெடுத்துள்ளார். இது குறித்து பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “நடிகர் சிவகார்த்திகேயன் “ஷேரு” என்ற 3 வயது ஆண் சிங்கத்தை 6 மாதங்களுக்கு தத்தெடுத்துள்ளார். சிவகார்த்திகேயனின் இந்த தத்தெடுப்பு கண்டிப்பாக ஷேரு சிங்கத்தின் பராமரிப்புக்கு பெரிதும் உதவும்.
எந்தவொரு தனிநபரும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இருந்து ஒரு விலங்கைத் தத்தெடுக்கலாம், இதன் மூலம் நீங்க பூங்காவில் உள்ள விலங்குகளின் பராமரிப்பு மற்றும் தீவன தேவைகளை நீங்கள் கவனித்துக்கொள்ள முடியும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்கனவே இதே பூங்காவில் ஒரு பெண் யானையை 6 மாதங்களுக்கு தத்தெடுத்திருந்த நிலையில் தற்போது சிங்கத்தையும் தத்தெடுத்திருப்பது பலராலும் வரவேற்கப்படுகிறது.