மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான் கானின் மின்னஞ்சல் ஐடி ஒன்றிற்கு, கொலை மிரட்டல் கடிதம் வந்தது. இந்த மிரட்டல் மின்னஞ்சல் தொடர்பாக மும்பை போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் மின்னஞ்சல் அனுப்பிய நபரின் அடையாளத்தை போலீசார் கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து மும்பை போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘சல்மான் கானுக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் விடுத்தவர், இங்கிலாந்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் இந்திய மாணவர்.
அரியானாவை சேர்ந்த அவர், இங்கிலாந்து கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வருகிறார். இந்தாண்டு இறுதிக்குள் அவர் இந்தியா திரும்ப வாய்ப்புள்ளது. அதனால் அவருக்கு எதிராக மும்பை காவல்துறை சார்பில் ‘லுக்அவுட்’ நோட்டீஸ் வெளியிட்டுள்ளது. இங்கிலாந்தில் இருந்து அவர் இந்தியா திரும்பும்போது பிடிப்போம். அல்லது இங்கிலாந்தில் இருந்து இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது’ என்று தெரிவித்தனர்.
சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த இந்திய மாணவருக்கு ‘லுக்அவுட்’ நோட்டீஸ்: இங்கிலாந்தில் இருந்து அழைத்து வர நடவடிக்கை
75