ஐதராபாத்: மகேஷ் பாபு வீட்டில் நடந்த சோக சம்பவம் குறித்து நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் கவலை தெரிவித்து வருகிறார்கள். கடந்த 7 ஆண்டுகளாக மகேஷ்பாபுவின் செல்ல நாயாக இருந்த புளுட்டோ, இறந்துவிட்டது. இதுதான் சோகத்திற்கு காரணம். புளுட்டோவுடன் இருக்கும் புகைப்படங்களை மகேஷ்பாபு வெளியிட்டிருக்கிறார். ஆனால் பதிவு எதுவும் அவர் வெளியிடவில்லை. இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் மகேஷ் பாபுவின் மனைவி நர்மதா ஷிரோட்கர், ‘எங்களைவிட்டு புளுட் டோ பிரிந்துவிட்டது. இதை நம்ப மனம் வரவில்லை. ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும்.
நாங்கள் சோகத்தில் மூழ்கியுள்ளோம். மகள் சித்தாரா சாப்பிடாமல் அழுது கொண்டிருக்கிறாள்’ என கூறியுள்ளார். இது பற்றி அறிந்த நர்மதாவின் அக்காவும் நடிகையுமான ஷில்பா ஷிரோட்கர், ‘இது சோகமான செய்திதான். ஆனால் குழந்தை சித்தாரா, கவலையில் இருக்கிறாள். நீ கலங்காதே. உன்னோடு நாங்கள் இருக்கிறோம்’ என இன்ஸ்டாகிராமில் மகேஷ்பாபுவின் மகள் சித்தாராவுக்கு ஆறுதல் கூறியிருக்கிறார். இதையடுத்து நர்மதாவின் இன்ஸ்டாகிராமில் ‘உங்களுக்கும் மகேஷ் சாருக்கும் ஆறுதல்கள் கூற வார்த்தையில்லை’ என நெட்டிசன்கள் கவலையுடன் பதிவிட்டு வருகிறார்கள்.