சென்னை: பகல் வேஷம் என்ற பாரம்பரிய கலையைப் பின்தொடரும் ஆஞ்சநேயர் வேடம் அணிபவர்களின் வாழ்க்கையையும் மற்றும் தந்தை, மகள் ஆகியோரின் பாசத்தையும் பற்றி சொல்லும் கதை கொண்ட படம், ‘வானரன்’. இதை ஆரஞ்ச் பிக்சர்ஸ் சார்பில் ராஜேஷ் பத்மநாபன், சுஜாதா ராஜேஷ் தயாரித்துள்ளனர். ‘டூ’ என்ற படத்தை இயக்கியிருந்த ராம் பத்மநாபன், இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.
சந்தானம் நடித்த ‘சர்வர் சுந்தரம்’, பிரபுதேவா நடித்த ‘பொன் மாணிக்கவேல்’ ஆகிய படங்களில் நடித்திருந்த நாகேஷ் பேரன் பிஜேஷ் நாகேஷ், இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். முக்கியமான வேடங்களில் அக்ஷயா, ஜீவா தங்கவேல், தீபா சங்கர், ஆதேஷ் பாலா, எஸ்.எல்.பாலாஜி, பேபி வர்ஷா, நாஞ்சில் விஜயன், வெங்கட் ராஜ், சிவகுரு, ராம்ராஜ், வெடிக்கண்ணன், நாமக்கல் விஜயகாந்த், ஜூனியர் டி.ஆர் நடித்துள்ளனர். நிரன் சந்தர் ஒளிப்பதிவு செய்ய, ஷாஜகான் இசையில் செந்தமிழ் பாடல்கள் எழுதியுள்ளார்.