சென்னை: ‘விக்ரம்’ படத்தில் வரும் ரோலக்ஸ் கேரக்டரை வைத்து முழு படம் உருவாக உள்ளதாக சூர்யா தெரிவித்துள்ளார். சமீபத்தில் ரசிகர்களுடன் சூர்யா உரையாடினார். அப்போது, அவர் நடிக்க உள்ள அடுத்தடுத்த படங்கள் பற்றி பலவித தகவல்கள் வருகின்றன. இதில் எது உண்மை என அவரது ரசிகர்கள் ேகட்டனர். இதற்கு சூர்யா அளித்த பதில்: இப்போது ‘கங்குவா’ படத்தில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறேன். இந்த படம் எனக்கு 100 சதவீதம் திருப்தி அளித்துள்ளது. அடுத்த ஆண்டில்தான் இந்த படம் ரிலீசாகும். ‘கங்குவா’ முடித்த பிறகு ‘வாடிவாசல்’ படப்பிடிப்பு தொடங்கும்.
‘விடுதலை 2’ படத்தின் வேலைகளில் வெற்றிமாறன் பிசியாக இருக்கிறார். அந்த வேலைகளை முடித்துவிட்டு வாடிவாசல் படத்தை வெற்றிமாறன் தொடங்குவார். அதையடுத்து சுதா கொங்கரா இயக்கும் படத்தில் நடிக்கிறேன். விக்ரம் படத்தில் இடம்பெற்ற ரோலக்ஸ் கேரக்டரை மையப்படுத்தி ஒரு கதையை லோகேஷ் கனகராஜ் உருவாக்கியுள்ளார். அவரே இயக்குகிறார். அதில் நடித்த பிறகே அவர் இயக்கும் ‘இரும்புக் கை மாயாவி’ என்ற ஃபேன்டஸி படத்தில் நடிப்பேன். இவ்வாறு சூர்யா கூறினார்.