தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் “இது என்ன மாயம்” திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, விக்ரம், விஷால் ஆகியோருடன் இணைந்து நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
மேலும் இவர் நடித்த ‘மகாநதி’ படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் “மாமன்னன்” திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்துள்ளார். இத்திரைப்படம் வரும் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது. இப்படத்தில் தான் கம்யூனிஸ்ட் ஆக நடித்துள்ளதாக அவரே கூறியுள்ளார்.
இந்நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் அரசியலில் களமிறங்க உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கீர்த்தி சுரேஷின் அரசியல் வருகை குறித்தான சர்ச்சை ‘மகாநதி’ படம் வெற்றியடைந்த சமயத்தில் அவருக்கு ஆந்திராவில் உள்ள அரசியல் கட்சியினர் பாராட்டு விழா நடத்தினர்.
அப்போது கீர்த்தி சுரேஷ் ஆந்திராவில் புதிய கட்சி தொடங்க உள்ளதாக கூறப்பட்டது. பின்னர் இந்த செய்தி வதந்தி என கூறப்பட்டது. அதே போல தற்போதும் அவர் தொடர்பான அரசியல் செய்தி வெளியாகியுள்ளதால் கோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.