சென்னை: தமிழகத்தில் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு சிறப்பு காட்சிகளுக்கான அனுமதி இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டு நடித்த பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் நாளை மறுதினம் வெளியாகிறது. இதையொட்டி படக்குழுவினர் இந்தியா முழுவதும் தனி விமானத்தில் பயணித்து இப்படத்தை புரமோஷன் செய்து வருகின்றனர். இந்த திரைப்படத்திற்கு நள்ளிரவு காட்சிகள் சிறப்பு காட்சிகள் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இரண்டாம் பாகம் வரும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்திற்கான முன்பதிவு சில தினங்களுக்கு முன்பு ஆரம்பமானது.
ஐமேக்ஸ் உள்ளிட்ட தியேட்டர்களுக்கும் முன்பதிவு ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த வார இறுதிக்குள் பள்ளிகளுக்கும் தேர்வுகள் முடிவடைகிறது. வார இறுதிநாள் வரை பெரும்பாலான தியேட்டர்களில் சிறப்பான முன்பதிவு நடைபெற்றுள்ளதாக தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு சிறப்பு காட்சிகளுக்கான அனுமதி இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த திரையரங்கு உரிமையாளர்கள்; ஆனால் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிகளுக்கு அரசு அனுமதி வழங்கவில்லை.
இதன் காரணமாக பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் முதல் காட்சி காலை 9 மணி முதல் திரையிடப்படும் என கூறுகின்றனர். இது தொடர்பாக படக் குழுவினர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில்; பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கு தமிழகத்தில் அதிகாலை 4 மணி காட்சிகள் திரையிடப்பட்டன. ஆனால் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கு அதிகாலை காட்சிகள் திரையிடப்படவில்லை. தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் பொன்னியின் செல்வன் திரைப்படம் நான்கு மணிக்கு திரையிடப்படும் என தெரிவிக்கபப்ட்டுள்ளது.