சென்னை: கடந்த வருடம் இந்தியில் சல்மான் கானுடன் ‘கிஸி கா பாய் கிஸி கி ஜான்’ என்கிற படத்தில் கதாநாயகியாக இணைந்து நடித்தார் பூஜா ஹெக்டே. அந்த படம் வெற்றி பெற்றிருந்தால் அவரது ரேஞ்சே வேறு மாதிரி ஆகி இருக்கும். அந்த படம் வரவேற்பை பெறாத நிலையில் தெலுங்கிலும் இன்னும் சரியான பட வாய்ப்புகள் அமையாமல் இருக்கிறார் பூஜா ஹெக்டே. இந்த நிலையில் இயக்குனர் நந்தினி ரெட்டி இயக்கத்தில் சித்துத் ஜொன்னல கட்டாட் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
இதற்கு முன்னதாக சமந்தாதான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால், கடந்த ஒரு வருடமாக அவர் சினிமாவில் இருந்து இடைவெளி விட்டு ஒதுங்கி ஓய்வெடுத்து வருவதால் அவருக்கு பதிலாக தற்போது பூஜா ஹெக்டேவை ஒப்பந்தம் செய்துள்ளார்கள் என்றும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும் சொல்லப்படுகிறது.
இதற்கிடையே மற்றொரு தகவலும் பூஜா ஹெக்டே ஒப்பந்தமானது பற்றி உலா வருகிறது. அதாவது, பான் இந்தியா படமான இதில் நடிக்க சமந்தா ஆர்வமாக இருந்தாராம். மருத்துவ சிகிச்சைக்கு பிறகு நடிக்க வருகிறேன் என படத்தின் இயக்குனர் நந்தினி ரெட்டியிடம் கூறினாராம். அவரும் சமந்தாவுக்காக காத்திருந்த சமயத்தில், படத்தின் தயாரிப்பாளரிடம் பூஜா ஹெக்டே பேசி, இந்த வாய்ப்பை பெற்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் பூஜா மீது சமந்தா தரப்பு கோபத்தில் இருக்கிறதாம்.