சென்னை: ஒரு மாத கைக்குழந்தையுடன் திருப்பதி கோயிலுக்கு வந்து பிரபுதேவா, அவரது மனைவி ஹிமானி சிங் தரிசனம் செய்தனர். முதல் மனைவி ரமலத்தை விவாகரத்து செய்த பிரபுதேவா, நடிகை நயன்தாராவுடன் வாழ்ந்து வந்தார். பிறகு இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு பிரிந்தனர். இதையடுத்து மும்பையை சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் ஹிமானி சிங் என்பவரை காதலித்து மணந்தார். 50 வயதாகும் பிரபுதேவாவுக்கு ஹிமானி சிங் மூலம் கடந்த மாதம் பெண் குழந்தை பிறந்தது.
இதையடுத்து ஹிமானி சிங், குழந்தை மற்றும் தந்தை சுந்தரம் ஆகியோருடன் பிரபுதேவா திருப்பதி கோயிலுக்கு நேற்று காலை வந்தார். அங்கு சாமி தரிசனம் செய்தார். பின்னர் திருப்பதி தேவஸ்தான நிர்வாகிகள் கொடுத்த தீர்த்த பிரசாதத்தையும் பெற்றுக் கொண்டார். இதுவரை தனது 2வது மனைவியை பொதுஇடங்களுக்கு அழைத்து வராமலும் அவரது புகைப்படத்தை காட்டாமலும் இருந்த பிரபுதேவா, முதல்முறையாக திருப்பதிக்கு மனைவியுடன் வந்து அவரை மீடியா முன் காண்பித்துள்ளார். ஆனால், அங்கிருந்த மீடியாவினரை அவர் சந்திக்காமல் சென்றுவிட்டார்.