ஐதராபாத்: ‘ஆர் ஆர் ஆர்’ படத்தின் பிளாக் பஸ்டர் ஹிட்டிற்கு பிறகு ராம்சரண் பான் இந்தியா ஸ்டார் ஆகிவிட்டார். இதேபோல் இயக்குனர் சுகுமார் அவரது இயக்கத்தில் வெளியான ‘புஷ்பா’ படத்தின் வெற்றியால் பெரும் புகழை பெற்றார். இவர்கள் இருவரும் இணையும் திரைப்படத்தின் தயாரிப்பு பணிகள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
பெயரிடப்படாத இந்த படம் 2025 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் ரிலீசாக இருக்கிறது. ‘ரங்கஸ்தலம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ராம்சரண், சுகுமார், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் தேவிஸ்ரீ பிரசாத் கூட்டணி இரண்டாவது முறையாக இதில் இணைந்துள்ளது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.