ஹாலிவுட் திரைப்பட இயக்குனர்களில் ஒருவரான ராப் மார்ஷல், இந்தியப் பத்திரிகை ஒன்றிற்கு சமீபத்தில் அளித்த பேட்டியில், ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆருடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார். அவரிடம், இந்திய நடிகர்களுடன் பணிபுரிவதில் அவருக்குள்ள ஆர்வம் குறித்து கேட்கப்பட்டது. இதற்கு அவர் உடனடியாக ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆரை குறிக்கும் விதமாக, ‘நாட்டு நாட்டு நடிகர்கள்’ என்று பதிலளித்தார். அதோடு, இரண்டு நடிகர்களும் அற்புதமானவர்கள் மற்றும் திறமையானவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
குறிப்பாக அவர்களின் தோற்றம், ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் அவர்களின் நடிப்பு மற்றும் அபாரமான நடன திறமையை மனம் திறந்து பாராட்டினார். இந்திய சினிமா துறை உலக அளவில் விஸ்வரூபம் எடுத்து வளர்ந்து வருவதற்கும், சர்வதேச பார்வையாளர்களிடம் அது ஏற்படுத்தும் தாக்கத்துக்கும் இயக்குனர் ராப் மார்ஷலின் இக்கூற்று மிகப்பெரிய சான்று. ‘தி லிட்டில் மெர்மெய்ட்’ படம் கடந்த வாரம் இந்தியாவில் ஆங்கிலத்தில் திரைக்கு வந்தது.