ஐதராபாத்: ஆந்திராவில் பிறந்த சரத்பாபு, 1977ல் கே.பாலசந்தர் இயக்கிய ‘பட்டினப்பிரவேசம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழி களில் ஹீரோவாகவும், குணச்சித்திர வேடங்களிலும் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவருக்கு 72 வயதாகிறது. இதனால், சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு தன் வீட்டில் ஓய்வெடுத்த அவருக்கு ‘செப்சிஸ்’ என்ற நோய் பாதிப்பு ஏற்பட்டது. ‘செப்சிஸ்’ என்பது சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல் போன்ற முக்கிய உறுப்புகளை பாதிக்கும் நோயாகும்.
இந்நிலையில், ஐதராபாத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனைஒ்ன்றில் அனுமதிக்கப்பட்டுள்ள சரத்பாபுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட தாகவும், உடல்நிலை சீரடைந்து வருவதாகவும் மருத்துவமனை தரப்பு தெரிவித்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகி வருகிறது. தெலுங்கில் கடைசியாக ‘வக்கீல் சாப்’, தமிழில் ‘வசந்தமுல்லை’ ஆகிய படங்களில் சரத்பாபு நடித்திருந்தார். ‘அண்ணாமலை’. ‘முத்து’ ஆகிய படங்களில் அவரது குணச்சித்திர நடிப்புக்கு வரவேற்பு கிடைத்தது. ‘முள்ளும் மலரும்’ படத்தில் ஷோபாவும், அவரும் பங்கேற்ற ‘செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்’ என்ற பாடல் காட்சியை மறக்க முடியாது.