ஐதராபாத்: மோகன்லால் முக்கிய வேடம் ஏற்று நடிக்கும் ஆக்ஷன் படம், ‘விருஷபா’. இதில் அவரது மகன் வேடத்துக்க தெலுங்கு நடிகர் ரோஷன் மேகா தேர்வு செய்யப்பட்டுள்ளார். தந்தைக்கும், மகனுக்கும் இடையிலான பாசம் மற்றும் மோதல் குறித்து கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதை கன்னட டைரக்டர் நந்தா கிஷோர் எழுதி இயக்குகிறார். முக்கிய வேடத்தில்ஸ்ரீ காந்த் மேகா நடிக்கிறார். ரோஷன் மேகா கூறுகையில், ‘மோகன்லாலுடன் நான் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது பாக்கியம். எனது கேரக்டர் சவாலானதாக இருக்கும். இதில் 100 சதவீதம் சிறப்பாக நடிக்க, கடுமையான முன்பயிற்சிகள் பெறுகிறேன்’ என்றார். இம்மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்குகிறது. அடுத்த ஆண்டு மலையாளம், தெலுங்கு, கன்னடம், தமிழ், இந்தியில் 4,500 திரையரங்குகளில் படம் வெளியாகிறது.
இப்படத்தை ஏ.வி.எஸ் ஸ்டுடியோ சார்பில் அபிஷேக் வியாஸ், விஷால் குர்னானி, ஜூஹி ப்ரேக் மேத்தா, பர்ஸ்ட் ஸ்டெப் மூவிஸ் சார்பில் ஷியாம் சுந்தர் மற்றும் பாலாஜி டெலிபிலிம்ஸ் சார்பில் ஏக்தாகபூர், ஷோபா கபூர் மற்றும் கனெக்ட் மீடியாவுக்காக வருண் மாத்தூர் தயாரிக்கின்றனர். தெலுங்கு நடிகர்ஸ்ரீ காந்த், தெலுங்கு நடிகை ஊஹா தம்பதியின் மகன் ரோஷன் மேகா என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஊஹா, தமிழில் சிவரஞ்சனி என்ற பெயரில் ஹீரோயினாக நடித்தவர்.