பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன் மற்றும் பல நடிகர்கள் நடித்து வரும் “தங்கலான்” படத்தின் படப்பிடிப்பு ஒரு மாதத்திற்கு பிறகு மீண்டும் தொடங்க உள்ளது. “தங்கலான்” படப்பிடிப்பின்போது விக்ரம்-க்கு விழா எலும்பில் காயம் ஏற்பட்டது. இதனால் அவரால் படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியவில்லை. இதனால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.
இதையடுத்து காயம் காரணமாக விக்ரம் ஒருமாத காலமாக ஓய்வில் இருந்து வந்தார். தற்போது காயம் குணமடைந்துவிட்டதால் அடுத்த வாரம் முதல் மீண்டும் படப்பிடிப்பை தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது. அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பா.ரஞ்சித் உடன் விக்ரம் முதன்முறையாக கைகோர்த்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகுதியாக உள்ளது. “தங்கலான்” திரைப்படம் விக்ரம் சினிமா கேரியறில் ஒரு முக்கிய படமாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.