‘பெண்கள் என்றாலே மட்டமாக நினைத்துப் பேசும் எண்ணம் மன்சூர் அலிகானுக்கு எப்படி தோன்றியது? திரிஷாவிடம் மட்டும் இல்லை, என்னிடமும் மற்றும் என்னுடன் இணைந்து நடித்த சக நடிகைகளிடமும் அவர் நிச்சயம் இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று டிவிட்டரில் விளாசியுள்ள குஷ்பு, ‘தேசிய மகளிர் ஆணையத்தில் உறுப்பினராக இருக்கும் நான், இதுதொடர்பாக மேலிடத்துக்கு செய்தி அனுப்பிவிட்டேன். நிச்சயமாக மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை பாயும். நடிகைகளை தவறாக நினைக்கும் எண்ணம் இனிமேல் யாருக்கும் வரக்கூடாது’ என்று ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார்.