சென்னை: இன்று நேற்று நாளை படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க விஷ்ணு விஷால் மறுத்துள்ளார். 2015ம் ஆண்டு வெளியான இன்று நேற்று நாளை படத்தில் விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன் உள்பட பலர் நடித்தனர். அறிமுக இயக்குனர் ரவிக்குமார் இயக்கி இருந்தார். டைம் மெஷின் கதை கொண்ட படமாக இது உருவாகி இருந்தது. சி.வி.குமார் தயாரித்து இருந்தார். இதன் இரண்டாம் பாகத்தை உருவாக்க சி.வி.குமார் திட்டமிட்டார். இதற்காக விஷ்ணு விஷாலிடம் அவர் கால்ஷீட் ேகட்டிருந்தார். தற்போது ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம், ராம்குமார் இயக்கும் பெயரிடப்படாத படம், மோகன்தாஸ் உள்பட 5 படங்களில் விஷ்ணு விஷால் நடித்து வருகிறார். இதனால் இன்று நேற்று நாளை படத்தில் நடிக்க தன்னிடம் கால்ஷீட் இல்லை என விஷ்ணு விஷால் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து அந்த வேடத்தில் நடிக்க ஹிப்ஹாப் ஆதியிடம் பேசப்பட்டது. அவர் இதில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த படத்தை ரவிக்குமாரின் அசோசியேட் இயக்குனர் ஒருவர் இயக்க இருக்கிறார். சி.வி.குமார் கதை எழுதியிருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் படத்தின் அறிவிப்பு வெளியாக உள்ளது. இதில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் டெக்னீஷியன்கள் தேர்வு நடந்து வருகிறது.
134