முன்னணி ஓடிடி தளம் நடத்திய கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாளவிகா மோகனன் பேசும்போது, ‘முன்னணி நடிகர்களுடன் நடித்தால்தான் நடிகைகளுக்கு பெயரும், புகழும் கிடைக்கும்’ என்று கூறியுள்ளார் இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், ‘ஒரு நடிகையாக திரைப்பயணத்தை ஆரம்பிக்கும்போது, நட்சத்திர நடிகர்களுடன் நடித்தால் மட்டுமே நமக்கான வரவேற்பு கிடைக்கிறது. இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு நடிகைக்கும் இதுதான் விதி. பெரிய நடிகருடன் நடித்து ஒரே இரவில் வெற்றியைப் பெறும்போது, அந்த வெற்றியில் நடிகைக்குப் பங்கு இல்லை என்பதாகவே உணர முடிகிறது. இதை நான் அனுபவித்து இருக்கிறேன்.
இந்த நிலை இப்போது என்றில்லை, இதற்கு முன்பிருந்தே தொடர்ந்து வருகிறது. இதுபற்றி அம்மா என்னிடம் நிறைய பேசியிருக்கிறார். அதன் காரணமாகவே எனக்கு நல்ல படங்கள் அமைய வேண்டும் என்று தினமும் பிரார்த்தனை செய்வார். என்னையும் பிரார்த்தனை செய்யச் சொல்வார். இப்போது எனது திரைப்பயணத்தில் ஒரு ரவுண்டு முடித்துவிட்டதால், நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்கும் பக்குவத்தைப் பெற்றுள்ளேன்’ என்றார்.