சென்னை: யோகி பாபு நடிப்பில் வெளியாகி தேசிய விருது பெற்ற ‘மண்டேலா’ படத்தை தொடர்ந்து மடோன் அஷ்வின் இயக்கியுள்ள படம், ‘மாவீரன்’. தெலுங்கில் ‘மகாவீருடு’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. கடந்த 14ம் தேதி திரைக்கு வந்த இப்படத்தில், சிவகார்த்திகேயன் நடித்த காட்சிகளுக்கு விஜய் சேதுபதி குரல் கொடுத்தார். அதாவது, ஒவ்வொரு முறையும் சிவகார்த்திகேயன் தலையை உயர்த்தி வானத்தைப் பார்ப்பார்.
பிறகு அங்கு ஒலிக்கும் குரலின் உத்தரவுக்கு ஏற்ப தனது செயல்களை நடத்துவார். கிட்டத்தட்ட முக்கால் பாகம் படம் வரை விஜய் சேதுபதி குரல் கொடுத்திருப்பார். இதற்கு சம்பளம் வாங்கவில்லை என்றும், மடோன் அஷ்வினின் நட்புக்காகவே இதைச் செய்ததாகவும் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.