சூப்பர் நேச்சுரல் ஹாரர் திரில்லர் படமாக ‘கண்டதை படிக்காதே’ உருவாகியுள்ளது. ஜோதி முருகன் எழுதி இயக்கியுள்ளார். புல்லி மூவிஸ் சார்பில் எஸ்.சத்யநாராயணன் தயாரித்துள்ளார். ஆதித்யா, சுஜி, சீனிவாசன், ஜெனி பெர்னாண்டஸ், ஆரியன், வைஷாலி, ராஜ் நவீன், சபீதா ஆனந்த் ஆகியோருடன் மணிமாறன் என்ற எழுத்தாளராக சத்யநாராயணன் நடித்துள்ளார். மகிபாலன் ஒளிப்பதிவு செய்ய, செல்வா ஜானகிராஜ் இசை அமைத்துள்ளார்.
ரவிதாசன் பாடல்கள் எழுதியுள்ளார். கொடைக்கானல், செங்கல்பட்டு, மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம், படப்பை ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. 11 நாடுகளில் நடந்த சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட இப்படத்துக்கு 9 சர்வதேச விருதுகள் கிடைத்துள்ளது. வரும் 30ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தை 9V ஸ்டுடியோஸ் வெளியிடுகிறது. சென்சாரில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.