சென்னை: டிவிட்டரிலிருந்து திடீரென விலகியுள்ளார் யாஷிகா ஆனந்த். துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா, ஜோம்பி உள்ளிட்ட படங்களில் யாஷிகா ஆனந்த் நடித்திருக்கிறார். இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக செயல்பட்டு வந்தார். டிவிட்டரில் இவருக்கு லட்சக்கணக்கில் ஃபாலோயர்கள் உள்ளனர். இந்நிலையில் திடீரென அவர் டிவிட்டரிலிருந்து விலகிவிட்டார். இது பற்றி விசாரித்தபோது, டிவிட்டரில் புளு டிக் பெற பணம் வசூலிக்கப்படுவதே இதற்கு காரணம் என யாஷிகா கூறினார். இது பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யாஷிகா கூறும்போது, ‘டிவிட்டரில் இருந்து எனது புளு டிக் நீக்கப்பட்டுள்ளது. இதை திரும்ப பெற பணம் கட்ட வேண்டும் என சொல்வது நியாயமற்ற செயல். அனைவரும் டிவிட்டரை புறக்கணிக்க வேண்டும். அராஜகத்துக்கும் ஒரு லிமிட் இருக்கிறது. எனக்கு இனி இன்ஸ்டாகிராம் மட்டுமே போதும்’ என்றார்.
283